ஸ்டாலின் அடுத்த அதிரடி! ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு!

 
ஸ்டாலின் அடுத்த அதிரடி! ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு!


தமிழகத்தில் ஸ்டாலின் அரசு பொறுப்பேற்றது முதல் துறை வாரியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். இந்த செயல்பாடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை உடனுக்குடன் தெரிவிக்க புகார் பதிவேடு பராமரிக்க பட வேண்டும் என தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ஸ்டாலின் அடுத்த அதிரடி! ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு!


தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ரேஷன் கடைகள் சரியாக செயல்படுவதில்லை. பொருள் இருப்பு வைக்கப்படுவதில்லை, கடை திறப்பதில்லை என்று பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இவைகளை எல்லாம் உடனடியாக களையும் பொருட்டும், மக்களின் குறைகளைத் தீர்க்கவும் தமிழக அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் புகார் பதிவேடு வைத்து, பொதுமக்கள் புகார் அளிக்க வழி ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகள் குறித்து இணையதளத்தில் புகாரளிக்கும் முறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், நியாயவிலைக் கடைகளிலேயே புகார் பதிவேடு வைக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

ஸ்டாலின் அடுத்த அதிரடி! ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு!


புகார் பதிவேடு முறையில் உடனடியாக புகாரை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இணையதளத்தில் புகார் அளிக்கும் முறையுடன், புகார் பதிவேடு முறையும் நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

From around the web