தமிழகத்துக்கு புயல் எச்சரிக்கை.. நாகை, கடலூர், எண்ணூர், பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

 
தமிழகத்துக்கு புயல் எச்சரிக்கை.. நாகை, கடலூர், எண்ணூர், பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி கற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடேயே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதை தொடர்ந்து நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டு உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. அதுபோல் திருவள்ளூர் எண்ணூர் துறைமுகத்திலும் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

From around the web