அரசு ஊழியர்களுக்கு சூப்பர் ஆபர்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

 
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் ஆபர்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அரசு ஊழியர்களின் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் மின்வாரிய ஊழியர்களும் இணைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக, ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து மாதம் தோறும் 300 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.

அரிய வகை சிகிச்சைகள் மற்றும் அறுவைச் சிகிச்சைகள் தேவைப்படுபவர்கள் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூலை 1 முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2025 ஜூன் 30வரை 4 ஆண்டுகள் அமலில் இருக்கும்” என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

From around the web