திடீரென தீப்பற்றி எரிந்த கார்! தலைமை செயலகத்தில் பரபரப்பு!

 
திடீரென தீப்பற்றி எரிந்த கார்! தலைமை செயலகத்தில் பரபரப்பு!

தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல அதிரடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் எந்த நேரத்திலும் எப்போதும் பாதுகாப்புக்கள் மற்ற பகுதிகளை விட தீவிரமாகவே இருக்கும்.

தினமும் பணிக்கு வரும் அதிகாரிகள், பணியாளர்கள் என பெரும்பாலானோர் வருவதால் கார்களின் எண்ணிகையும் அதிகம். இந்நிலையில் திடீரென புனித ஜார்ஜ் கோட்டையின் பின்பகுதியில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்து திடீரென புகை கிளம்பியது.

திடீரென தீப்பற்றி எரிந்த கார்! தலைமை செயலகத்தில் பரபரப்பு!

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு கார் ஒன்று தீப்பிடித்தது எரிந்து கொண்டிருப்பதை கண்டனர். தீடீரென தீப்பற்றி அதிகளவில் புகை வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவல் தெரிவிக்கப் பட்டதும் தீயணைப்புத்துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காரின் முன்பக்கம் எரிந்து சேதமான நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முதல் கட்ட விசாரணையில் அந்த கார் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியரின் கார் எனவும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் ஒரு வேலை எது சதிவேலையாக இருக்குமோ என காவல்துறை சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

From around the web