இனி இவர்களுக்கு இங்கு பணி இல்லை

 
இனி இவர்களுக்கு இங்கு பணி இல்லை

பெண் காவலர்கள் பணியின் போது பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது அவர்கள் செல்லும் வழிப்பாதையில் பாதுகாப்பு பணிக்காக நீண்ட நேரம் பெண் காவலர்கள் நிற்க வேண்டிய சூழல் உருவாகும் போது இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘‘எனது சுற்றுப்பயணத்தின் போது சாலையோரம் பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்கள் இருப்பதை பார்த்துள்ளேன். இனி வரும் காலங்களில் அதுபோன்று பெண் காவலரை நீண்ட நேரத்திற்கு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்.

இனி இவர்களுக்கு இங்கு பணி இல்லை

இதுதொடர்பான உத்தரவை அனைத்து மாவட்ட காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்’’ என்று டி.ஜி.பி.திரிபாதியிடம் அறிவுறுத்தினார்.

இதையடுத்து டி.ஜி.பி. திரிபாதி, முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தில் அவர் செல்லும் வழிகளில் பெண் காவலரை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி இவர்களுக்கு இங்கு பணி இல்லை

இதுதொடர்பான அதிகார உத்தரவு விரைவில் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமி‌ஷனர்கள், மண்டல ஐ.ஜி.க்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

From around the web