இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்! நிர்கதியான குழந்தைகளுக்கு ரூ.5,00,000/- வைப்பு நிதி!

 
இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்! நிர்கதியான குழந்தைகளுக்கு ரூ.5,00,000/- வைப்பு நிதி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு ரூ.5,00,000 வைப்பு நிதியாக வழங்கும் திட்டத்தை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பாதிப்புகளும் உயிரிழப்புகளும் புதிய உச்சத்தை தொட்டு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதில், பல குழந்தைகள், இந்தக் கொரோனா பாதிப்பால் தங்களது தாய் – தந்தையை இழந்து தவித்து வருகின்றனர். அந்த வகையில் பெற்றோரை இழந்து அனாதைகளாக்கப்படும் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்கிற கோரிக்கை பலராலும் வைக்கப்பட்டு வந்தது.

இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்! நிர்கதியான குழந்தைகளுக்கு ரூ.5,00,000/- வைப்பு நிதி!

இதனைத்தொடர்ந்து குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசு, கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும் என்றும் அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் வைப்பு நிதியாக ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சம் வழங்கும் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.

From around the web