விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாட ஆசையா?இதில் பதிவு செய்ங்க!

 
விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாட ஆசையா?இதில் பதிவு செய்ங்க!


இந்தியா முழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு உலக நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றன. அந்த வகையில் அகில இந்திய செஸ் சம்மேளனம் சார்பில் கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்ட செஸ் போட்டி ஆன்லைன் மூலமாக நடத்துகிறது. இந்த போட்டியில் 5 முறை உலக சாம்பியன் விசுவநாதன் ஆனந்த் மற்றும் கிராண்ட்மாஸ்டர்கள் கோனேரு ஹம்பி, ஹரிகா, நிஹல் சரின், பிரக்ஞானந்தா ஆகியோர் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு மற்ற வீரர், வீராங்கனைகளுடன் விளையாடுகிறார்கள்.

இந்த போட்டியில் ஆனந்துடன் விளையாட விரும்புபவர்கள் ரூ.11 ஆயிரமும், மற்ற 4 பேருடன் மோத விரும்புபவர்கள் ரூ.1,800-ம் கட்டணமாக செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த போட்டியின் மூலம் திரட்டப்படும் நிதி இந்திய செஞ்சிலுவை சங்கம் மூலமாக கொரோனா நிவாரண பணிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. செஸ் காம் என்ற இணையதளத்தின் மூலம் இந்த போட்டிகளை நேரலையில் பார்க்கலாம். அப்போது நன்கொடை அளிக்க விரும்புபவர்களும் தாராளமாக நிதி கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web