ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்த‌து ஏர் இந்தியா விமானம்

 
ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்த‌து ஏர் இந்தியா விமானம்

தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரை தங்கள் வசமாக்கி நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையால் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர காபூல் விரைந்தது AI 244 ஏர் இந்தியா விமானம். இந்த விமானம் அங்கு பணியாற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் என 129 பயணிகளை அழைத்து கொண்டு டெல்லி வந்தடைந்த‌து ஏர் இந்தியா விமானம்.

From around the web