பிரேசிலில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 2,760 பேர் பலி

 
பிரேசிலில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 2,760 பேர் பலி

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் அமெரிக்காவும், இந்தியாவை தொடர்ந்து தென் அமெரிக்க நாடான பிரேசில் உள்ளது.

இந்நிலையில், பிரேசில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 88,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,75,43,8539 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,760 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,91,164 ஆக உயர்ந்துள்ளது.

From around the web