நேபாள ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலி மேலும் பலர் காணவில்லை

 
நேபாள ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலி மேலும் பலர் காணவில்லை

நேபாளத்தில் நேற்று பெய்த கனமழை மற்றும் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகவும் மேலம்ஷி மற்றும் இந்திரவதி ஆறுகளில் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து பக்மதி மாகாணத்தில் உள்ள சிந்துபல்சவுக் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆற்றுநீர் புகுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாள ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலி மேலும் பலர் காணவில்லை

இந்நிலையில், இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலர் மாயமாகியுள்ளதாகவும் சிந்துபல்சவுக் மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

From around the web