இன்று அதிகாலை இந்தியா வந்த டென்மார்க் பிரதமர்
Oct 9, 2021, 07:25 IST
அக்டோபர் 9 முதல் 3 நாள் அரசு முறை பயணமாக இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்த டென்மார்க் நாட்டின் பிரதமர் எச்.இ.மெட்டே பிரடெரிக்சனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளார் மீனாட்சி லேகி டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார்.
இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். அதன்பின் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்துப் பேச உள்ளார்.
இந்தியாவும், டென்மார்க்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பசுமை யுக்தி கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
From around the
web