தடுப்பூசி போடலன்னா பொது இடங்களுக்கு செல்ல தடை! அதிரடி அறிவிப்பு!

 
தடுப்பூசி போடலன்னா பொது இடங்களுக்கு செல்ல தடை! அதிரடி அறிவிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனைகள், பள்ளிகள் உட்பட பொது இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது.

தடுப்பூசி போடலன்னா பொது இடங்களுக்கு செல்ல தடை! அதிரடி அறிவிப்பு!

கொரோனா சீனாவில் தொடங்கி இருந்தாலும், தீவிர கட்டுப்பாடுகளின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது சீனா புதிய விதிகளை அறிவித்துள்ளது.
அதன்படி இரண்டாம் நிலை நகரங்களில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஜூலை 23க்குள் பொதுமக்கள் அனைவரும் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும். இதனை கடைப்பிடிக்காதவர்கள் மருத்துவமனைகள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பள்ளிகள் உட்பட எந்த பொதுஇடங்களுக்குச் செல்லவும், பொது போக்குவரத்தைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

From around the web