உலக சாதனை ! ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் !

 
உலக சாதனை ! ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் !


ஆப்பிரிக்காவில் சமீபத்தில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்தார். இதுவே உலக சாதனையாக இருந்து வந்தது. ஆனால் இந்த சாதனை சில மாதங்களிலேயே முறியடிக்கப் பட்டுள்ளது. அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கோஷியாமி தமாரா சித்தோல். இவருக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உண்டு. தற்போது ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார் . இவருக்கு வயது 37

உலக சாதனை ! ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் !


இரண்டாவது முறை கர்ப்பம் தரித்த அவருக்கு பரிசோதனையில் 8 குழந்தைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கோஷியாமி தமாரா சித்தோலுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து பிரிட்டோரியா நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிசேரியன் மூலம் 7 ஆண், 3 பெண் என 10 குழந்தைகள் பிறந்துள்ளன.


தாயும், 10 குழந்தைகளும் நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கோஷியாமியின் கணவர் விடுத்த செய்திக் குறிப்பில் 10 குழந்தைகள் பிறந்து இருப்பது என்னை உணர்ச்சி வசமாகவும், மகிழ்ச்சியாகவும் ஆக்கியுள்ளது. எனது மனைவி இயற்கையாகவே கருத்தரித்தார். எந்த மருத்துவ சிகிச்சையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். முதலில் ஸ்கேன் செய்தபோது 6 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்தனர். அதன் பிறகு 8 குழந்தைகள் இருப்பதாக கூறினார்கள். கர்ப்பம் ஆனதில் இருந்து கடினமாகவோ அல்லது பெரும்பாலும் உடல்நிலை சரியில்லாமலோ இருந்து வந்தேன். குழந்தைகள் அனைவரையும் ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web