அமாவாசையில் புதிய விஷயங்களை தொடங்கலாமா?
Jun 9, 2021, 04:45 IST
இந்து புராணங்களை பொறுத்தவரை ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் நம் முன்னோர்கள் புண்ணிய லோகத்திலிருந்து பூமிக்கு நம்மைக் காண வருகிறார்கள் என்பது ஐதிகம். அறிவியல் ரீதியாக சந்திரனும் சூரியனும் ஒன்று சேர்வதால் ஒரு விதமான காந்த சக்தி பூமியில் ஏற்படுகிறது
இதனால் தான் அமாவாசை தினத்தில் கடலில் அலைகள் பெரிது பெரிதாக பொங்கி எழுகின்றன. இந்த காந்த அலைகள் செரிமானத்தை மந்தமாக்கும் காரணத்தால் தான் அமாவாசையன்று அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
அமாவாசை தினத்தன்று பூமிக்கு வரும் முன்னோர்கள், வாரிசுகளை பார்த்து ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள். இந்த நம்பிக்கையை மனதில் வைத்து அமாவாசை தினத்தில் நமது முன்னோர்களையும், பிதுர் தேவதைகளையும் வழிபட்டு புதிய காரியங்களை தொடங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு.
From around the
web