கார்த்திகை தீபம்... வீட்டில் இந்த இடத்தில் விளக்கேற்ற மறக்காதீங்க... முன் வினை பாவங்கள் தீரும்... செல்வம் நிலைக்கும்!

 
அகல் விளக்கு தீபம்

தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொட்டும் மழையிலும் தீப ஒளி ஒளிர்கிறது. இன்று ஒரு நாள் என்றில்லாமல் இந்த கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டின் தலைவாசலில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். குறிப்பாக கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில், வீட்டு வாசலில் மாலையில் விளக்கேற்றி வைத்தால், நம் இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும். தரித்திரம் விலகும் என்பது ஐதீகம். இந்த வருடம் கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக்கிழமையில் திருக்கார்த்திகைத் திருவிழா அமைந்திருக்கிறது. 

கார்த்திகை மாதம் என்பது ஒருபக்கம் ஐயப்ப பக்தர்களுக்கான மாதம். இன்னொரு பக்கம் சிவாலய வழிபாட்டுக்கான மாதம். மற்றொரு பக்கம் பார்த்தால், கார்த்திகேயன் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானை வணங்குவதற்கு உரிய மாதமும் கூட!

அடியும் முடியும் தேடிக் கிடைக்காமல் போனதால், ‘சிவமே பெரிது’ என மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் ஏற்றுக் கொண்டதால், பெருமாளை வணங்கி வழிபடுவதும் பிரம்மா கோயிலுக்குச் சென்று தரிசித்து அருளைப் பெறுவதும் என அற்புதமான வழிபாடுகளும் பூஜைகளுமாக செய்கிற மாதம் இது.

இன்று எம தீபம் ஏற்றும் நேரம்  இதுதான்!!

முக்கியமாக, கார்த்திகை மாதம் என்பது தீப மாதம். திருமண மாதம் என்றும் சொல்லுவார்கள். திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறும் மாதம். கிராமங்களில், கார்த்திகை மாதம் வந்துவிட்டாலே, தினமும் வீட்டு நிலைவாசற்படியில் விளக்கேற்றி வைத்திருப்பார்கள். இன்றைக்கும் இதை வழக்கமாகக் கொண்டிருக்கிற கிராமங்கள் இருக்கின்றன.

சென்னை முதலான பெருநகரங்கள், அபார்ட்மென்ட் குடியிருப்புகளாக மாறிய போது, கிராமத்தில் இருந்து வந்தவர்கள், இதைக் கடைப்பிடித்தார்கள். பிறகு கொஞ்சம்கொஞ்சமாக மாறிவிட்டன. கார்த்திகை மாதத்தில், தினமும் நிலைவாசற்படியில் விளக்கேற்றி வைப்பது விசேஷமானது. அப்படி தினந்தோறும் விளக்கு ஏற்றி வைக்க முடியாதவர்கள், கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமாவது, மறக்காமல் இரண்டு அகல்விளக்குகளை ஏற்றிவைத்து பூஜையறையில் நாம் அமர்த்தியிருக்கும் தெய்வங்களை வழிபடுவது பல நன்மைகளைத் தந்தருளும்.

விளக்கு

ஞாயிற்றுக் கிழமை என்பது சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நன்னாள். மாலை என்று சொல்லப்படுகிற சாயங்கால வேளையில் சந்திரன் ஆதிக்கம் வந்துவிடும். மறுநாள் திங்கட்கிழமையும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். திங்கள் என்றால் சந்திரன் என்று அர்த்தம். ஞாயிற்றுக்கிழமை மாலையில் சந்திரனின் ஆதிக்கம் தொடங்குகிற வேளையில், வாசலில் விளக்கேற்றி வைத்து, வழிபட்டு வந்தால் நன்மைகள் அனைத்தும் கிடைக்கப் பெறலாம். இல்லத்தில் ஐஸ்வர்யம் குடிகொள்ளும். இதுவரை வீட்டில் இருந்த தரித்திரம் நீங்கப்பெற்று நிம்மதியாக வாழலாம்.

மேலும், சந்திரனை மனோகாரகன் என்கிறது ஜோதிடம். நம் மனதை இயக்குபவன் சந்திரன். அந்த சந்திரனை ஞாயிற்றுக்கிழமைகளில் வரவேற்கும் விதமாக வாசலில் தீபமேற்றி வழிபட்டு வந்தால், மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.  கார்த்திகை தினத்தில் கார்த்திகேயனை வழிபட்டு, வீட்டின் நிலை வாசலில் அகல் விளக்கேற்றி வைத்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web