இன்று முதல் ஆன்லைன் பதிவு! திருப்பதி தரிசனத்துக்கு 15,000 டிக்கெட்கள்!

 
இன்று முதல் ஆன்லைன் பதிவு! திருப்பதி தரிசனத்துக்கு 15,000 டிக்கெட்கள்!

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் ஆன்லைனில் இன்று வெளியிடப்படுகிறது.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறைந்த மாநிலங்களில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருப்பதி திருமலையில் சுவாமி தரிசனத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த மாதம் 22,23,24 ஆகிய தேதிகளுக்கான ரூ.300/ – சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் இன்று (16ம் தேதி )வெளியிடப்படுகிறது.

இந்த மூன்று தினங்களுக்கு தினமும் ஒரு நாளைக்கு 5,000 டிக்கெட்கள் என 15,000டிக்கெட்கள் இன்று காலை 10 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in/ என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் .

From around the web