சூப்பர்! மணமக்களுக்கு வீடு தேடி வரும் திருப்பதி ஏழுமலையான் பிரசாதம்!

 
சூப்பர்! மணமக்களுக்கு  வீடு தேடி வரும் திருப்பதி ஏழுமலையான் பிரசாதம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலை தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள் லட்சக்கணக்கானோர். உலகம் முழுவதும் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக பலரும் ஏழுமலையானை தரிசிக்க முடியாமல் காத்துக் கிடக்கின்றனர்.

வாழ்க்கையில் ஒருமுறையாவது திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து விட வேண்டும் என்ற ஏக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அதே போல் திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதிகளை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அழைத்து செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அனைவரது ஏக்கத்தையும் தீர்க்கும் வகையில் திருமணத்திற்கு முன்பாகவே அந்த அற்புத வாய்ப்பை ஏற்படுத்தி தர முன்வந்துள்ளது திருப்பதி தேவஸ்தானம்.

சூப்பர்! மணமக்களுக்கு  வீடு தேடி வரும் திருப்பதி ஏழுமலையான் பிரசாதம்!

உறவினர்கள், நண்பர்கள், பக்தர்கள் வீட்டில் உள்ளவர்கள் யாருக்கேனும் திருமண நிச்சயம் செய்யப்பட்டு இருந்தால் திருமண அழைப்பிதழை ஒரு மாதத்திற்கு முன்பாக திருப்பதி தேவஸ்தானம் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அவ்வாறு அனுப்பி வைக்கும் திருமண அழைப்பிதழ்களுக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஏழுமலையானின் பிரசாதம் மற்றும் மங்கலப்பொருட்கள் பெருமாளின் ஆசிர்வாதத்துடன் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

சூப்பர்! மணமக்களுக்கு  வீடு தேடி வரும் திருப்பதி ஏழுமலையான் பிரசாதம்!

இந்த பிரசாதத்தில் திருமணத் தம்பதிகள் கையில் கட்டிக் கொள்ளும் கங்கணம் , குங்குமம், மஞ்சள் போன்ற மங்கலப் பொருட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுப்பி வைப்பதுடன், ஏழுமலையானின் அற்புதங்களைக் கூறும் புத்தகம் ஒன்றையும் அனுப்பி வைக்க இருக்கிறது. இந்த நடைமுறையால் திருப்பதி பெருமாளுக்கு திருமண அழைப்பிதழை சமர்ப்பித்த மாதிரியும் இருக்கும், அதே மாதிரி அவரின் பூரண ஆசியுடன் திருமணம் நடைபெறுவது போன்ற உணர்வையும் நம்முள் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

From around the web