செம போதை... மாணவிகளிடம் ஆபாச பேச்சு... ஆசியரைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்!

 

அளவுக்கு மீறிய போதையில், தள்ளாடிக் கொண்டே அரசு பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர், மாணவிகளிடம் ஆபாசமாக பேசியது கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், ஆசிரியரைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அருள் பிரகாசம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் தொடர்ந்து ஆபாசமான முறையில் தகாத வார்த்தைகள் பேசி வந்ததாகவும், பள்ளி நேரத்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி மாணவ மாணவிகள் ஏற்கனவே பலமுறை தலைமையாசிரியரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவிகள் சிலரிடம் அருள் பிரகாசம் மீண்டும் தகாத வார்த்தைகள் கூறி ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அருள் பிரகாசத்தை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி சாலையில் அமர்ந்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த தகவல் அறிந்து வந்த காவலர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!