அரசு பணியாளர்களுக்கு 3% அகவிலைப்பaடி உயர்வு! 

 

ஒடிசா மாநில அரசுப் பணியாளர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த உயர்வால் அரசுப் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி விரிவுரையாளர்கள் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.

புதிய அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2025 முதல் பிற்சேர்க்கையுடன் வழங்கப்படும். இதன் மூலம் பணியாளர்களுக்கான மொத்த அகவிலைப்படி 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக அதிகரிக்கிறது.

இந்த உயர்வால் ஒடிசா மாநிலத்தில் சுமார் 8.5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?