வாடகை பணம் பாக்கி... கல்லூரி மாணவர்களை பெல்ட்டால் விளாசிய ஹாஸ்டல் வார்டன்!
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷிவம் என்ற கல்லூரி மாணவரும் அவரது நண்பரும், வாடகைப்பணம் தகராறில் தங்கும் விடுதியின் மேலாளரால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானார்கள். அந்த பயங்கரமான வீடியோவில் விடுதி மேலாளர் இரக்கமின்றி ஷிவம் மற்றும் அவரது நண்பரை பெல்ட்டால் அடிப்பதைக் காட்டுகிறது. தாக்குதலின் போது மாணவர்களின் அழுகையை அடக்குவதற்காக தாக்குதல் நடத்தியவர்கள் வாயில் துணியை திணித்தனர். கொடுக்கப்படாத வாடகைப்பணம் தொடர்பான தகராறு காரணமாக வன்முறை மோதல் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. மாணவர்களை மேலாளர் தொடர்ந்து அடித்ததால் மாணவர்கள் செய்வதறியாது தவித்தனர், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு மாணவர்களின் பாதுகாப்பின் தீவிரப் பிரச்சினையை எடுத்துக்காட்டுவதோடு, தனியார் விடுதிகளில் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள் குறித்த கவலையை எழுப்புகிறது. இது போன்ற நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் தேவை என்பதை நினைவூட்டுவதாகவும் உள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!