தேர்வில் தோல்வியால் 11ம் வகுப்பு  மாணவி தூக்கிட்டு தற்கொலை!!  தொடரும் சோகம்!!

 


11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த அரசுப்பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கௌதாளம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் சந்தனா ஸ்ரீ, தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு காமர்ஸ் குரூப் எடுத்து படித்து வந்தார். அண்மையில் தமிழகம் முழுவதும் 11 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் மாணவி சந்தனா ஸ்ரீ தோல்வி அடைந்தார். இதனால் விரக்தியில் இருந்த அவர், வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 
இதனைப் பார்த்த  அவரது பெற்றோர் உடனடியாக மாணவியை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அலறித் துடித்தனர். இதுகுறித்து கெலமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை