காலையில்  பயங்கரம்... 12ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை...!!

 

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம்  மேல்புளியங்குடியில் வசித்து வருபவர்   வீரமணி. இவரது மகன் ஜீவா. இவர்  விருத்தாச்சலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். காலாண்டு விடுமுறை முடிந்து இன்று  காலை வழக்கம் போல பள்ளி செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது தற்காலிக ஊழியராக மின்வாரியத்தில் பணிபுரிந்து வரும்   ஆனந்த்  அங்கு வந்து, தான் வைத்திருந்த கத்தியால்  எதிர்பாராதவிதமாக  ஜீவாவை சரமாரியாக குத்தியுள்ளார். 

 


மாறி மாறி உடலில்  8 இடங்களில் கத்திக்குத்து விழுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜீவா உயிருக்கு போராடிய நிலையில்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர்   ஜீவாவின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 


இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்யப்பட்டு  விசாரனை நடைபெற்று வருகிறது. இருவருக்கும் ஏதும் முன்விரோதம் காரணமா?  காதல் விவகாரமா?  வேறு ஏதேனும் காரணமா? என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.  பட்டப்பகலில் பேருந்து நிறுத்தத்தில் 12ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!