பகீர் வீடியோ... டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து 8 குழந்தைகள் உட்பட 15 பேர் பலி... முதல்வர் இரங்கலுடன் நிவாரணத் தொகை அறிவிப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் இன்று காலை டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் 7 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாட்டியாலி தரியவ்கஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர்கள் குடும்பத்துடன் கங்கையில் குளிக்க சென்றனர். குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அனைவரும் இணைந்து கங்கை ஆற்றில் குளிக்கச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த கோர விபத்தில் குளத்தில் மூழ்கி 15 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இச்சம்பவம்குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் "டிராக்டர் டிரைவர் மற்றொரு வாகனத்தை முந்த முயன்றபோது டிராக்டர்-டிராலி கவிழ்ந்து 7-8 அடி ஆழமுள்ள குளத்தில் கவிழ்ந்தது. 7 குழந்தைகள் உட்பட 15 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும் 15-20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது குறித்து தம்முடைய எக்ஸ் பக்கத்தில் "காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 15 பேர் உயிர் இழந்தது மிகவும் மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். படுகாயம் அடைந்த அனைவருக்கும் முறையான இலவச சிகிச்சை அளிக்கப்படும். இவர்களின் ஆன்மா சாந்தியடையவும், படுகாயம் அடைந்தவர்கள் குணமடையவும் ஸ்ரீ ராமரைப் பிரார்த்திக்கிறேன். ” என பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!