மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

 
மாசி

இப்போ தான் வருஷம் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு. அதற்குள் ஜனவரி  முடிஞ்சு, பிப்ரவரியும் பாதி கரைஞ்சிடுச்சு. தமிழ் மாதங்களில் மாசி மாதம் துவங்கிடுச்சு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதன் காரணம் தை  மாதம் மட்டுமே கிடையாது. அதன் பிறகு சித்திரை வரையில் அடுத்தடுத்து நல்ல கால சூழல் அமைகிறது. மாசி மாதத்தில் இந்த குறிப்பிட்ட நட்சத்திர நாட்களை மிஸ் பண்ணாதீங்க.

மகத்துவங்கள் நெறஞ்ச மாசம் மாசி மாதம்.  மாசி மாதம் நம்முடைய வழிபாடுகளால் மனம் வலிமை பெறும் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. மாசி மாதம்  மாங்கல்ய மாதம். மாசி மாதத்தில் தான் சக்தி சிவத்தோடு இணைந்து முழுமை பெறுகிறார். இதனால் தன் கணவனின் நலனுக்காக பெண்கள் இந்த மாசி மாதத்தில் தாலிச்சரடை மாற்றிக் கட்டிக் கொள்வர். மாசிக் கயிறு பாசி படியாது என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் மொழி. 

5வது திருமணம்

இந்த மாதத்தில் தான் அனைத்து  புண்ணிய நதி, தீர்த்தங்கள், கடற்கரையிலும் தீர்த்தங்களிலும், சமுத்திரங்களிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் சைவ, வைணவ திருத்தலங்களில்  மாசி மாதத்தில் கடலாட்டு விழா உற்சவங்கள் கோலாகலமாக நடைபெறும்.

மாசி மாதத்தில்  பார்வதி தேவி தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள் என்கின்றன நமது புராணங்கள். சிவபெருமானின் திருவிளையாடல்கள் பல  மாசி மாதத்தில் தான் நிகழ்த்தப்பட்டது. மாசி மாதம் முழுவதுமே சிவ வழிபாட்டுக்கு உரிய மாதம்.  மாசி மாத பூச நட்சத்திர தினத்தில் தான் முருகப்பெருமான் சுவாமிமலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார். மகத்துவம் நிறைந்த மாசி மாத ஏகாதசியில் உயர்படிப்பிற்கான விண்ணப்பங்களை எழுதலாம். மாசி மகம் நட்சத்திர நாளில் அவற்றைத் தொடங்கினால் அந்த துறையில் மிகப்பெரிய உச்சம் தொடலாம் என்பது நம்பிக்கை.

திருமணம் கல்யாணம் கும்பம்

மாசி மாதத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரதம் இருந்து, குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வழிபடலாம். இதனால்  சகலவிதமான தோஷங்களும், பாவங்களும் விலகி, குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்பது ஐதீகம்.

மாசி மகத்தில் சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணு பகவானையும், பித்ருக்களையும் வணங்கினால் சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்வு பெறலாம்.  இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் முன் ஜென்ம பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். மாசி மாதம் பௌர்ணமியும், மகம் திதியும் சேர்ந்து வரக்கூடிய அற்புத நாளே மாசி மகம். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web