ரிலாக்ஸ்... ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு 40 ஏசிகள்... இந்திய தூதரகம் அதிரடி!
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33 வது ஒலிம்பிக் 2024 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஒலிம்பிக் கேம்ஸ் கிராமத்தில் தங்கியுள்ள இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 40 குளிர்சாதனங்களை இந்திய தூதரகம் வழங்கியுள்ளது.
ஒலிம்பிக் 2024ல் இதுவரை இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது.
ஆனால், இது அனைத்து வீரர்களுக்கும் ஏற்றதாக இல்லை எனத் தெரிகிறது. சில விளையாட்டு வீரர்கள், தங்குவதற்கு ஹோட்டல்களை தேட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சில விளையாட்டு வீரர்கள் வெப்ப அலைக்கு ஏற்ப தங்களது சொந்த உபகரணங்களை கொண்டு வந்துள்ளனர். அமெரிக்கா போன்ற சில நாடுகள் தங்களது விளையாட்டு வீரர்களுடன் கையடக்க ஏசிகளை அனுப்பியுள்ளன.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா