undefined

 அனல் மின் நிலைய பொறியாளா் வீட்டில் 50 சவரன் நகைகள் திருட்டு!

 
 


தூத்க்குடியில் ஓய்வுபெற்ற அனல்மின் நிலையப் பொறியாளர் வீட்டில் 50 சவரன் நகைகளையும், ரூ. 45,000 பணத்தையும் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த முத்துவீரன் மகன் காந்தி (63). தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்  தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று உள்ளார். நேற்று வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

மேலும் வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த  50 பவுன் நகைகள், ரூ. 45 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது. இது குறித்து புகாரின் பேரில், வடபாகம் போலீசார் வழக்குப் பதிந்து, அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சம்பவ இடத்திற்கு ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!