சைக்கிள் ஓட்டும் போது  மின்சாரம் தாக்கி  5ம் வகுப்பு மாணவன் பரிதாப  பலி!! 

 

விடுமுறை நாட்களை கழிப்பதற்காக உறவினர் வீட்டிற்கு வந்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கொடைரோடு தஞ்சை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா ஓரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் மணியரசன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் மணியரசன் தனது விடுமுறை விடுப்பை திண்டுக்கல் மாவட்டம் அழகம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் கழிக்க முடிவு செய்தான். இதன்படி சுரேஷ் தனது உறவினர் வீட்டிற்கு மணியரசனுடன் சென்றிருந்தார்.

இந்நிலையில் மணியரசன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து சைக்கிள் ஒட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது நீண்ட தூரத்தில் இருக்கும் மின் கம்பத்தில் இருந்து வீட்டு மின் இணைப்புக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு குழாயை தவறுதலாக பிடித்துள்ளார். அதில் கசிந்த மின்சாரம் மணியரசன் மீது மின்னல் வேகத்தில் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட மணியரசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தான்.


இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், அம்மையநாயக்கனூர் போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் மணியரசனின் உடலை கைப்பற்றி  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் செயல்பட்டு வரும் மின் வாரியத்தையும் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.


உறவினர் வீட்டிற்கு பள்ளி விடுமுறைக்காக வந்த 5ம் வகுப்பு சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை