மேலும் ஒரு மாணவி தற்கொலை!! கல்லூரிகளில் தொடரும் சோகம்!!!

 


கல்லூரி மாணவி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே சோம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜ். எலக்ட்ரீசியனாக இருந்து வருகிறார். இவரது மகள் ஹேமலதா (வயது 18) பொன்னேரியில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

இந்நிலையில் நேற்று இரவு ஹேமலதா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென்று மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து விரைந்து வந்த  உறவினர்கள் அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கல்லூரி மாணவி ஹேமலதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக வருத்தம் தெரிவித்தனர். 


இது குறித்து தகவல் அறிந்த  கவரைப்பேட்டை போலீசார் மாணவி மரணம் குறித்து வழக்குபதிவு செய்தனர். கல்லூரி மாணவி ஹேமலதா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஹேமலதா வீட்டில் ஏதேனும் கடிதம் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். மாணவியின் குடும்பத்தினர், கல்லூரி தோழிகள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் ஆகியோரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.கல்லூரி மாணவி திடீரென்று தற்கொலை செய்து கொண்டதால் கும்மிடிப்பூண்டி மக்களிடையே சோகம் நிலவுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை