BREAKING!! நடிகர் விஜயகாந்த்தின் காலில் 3 விரல்கள் அகற்றம்!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 

தே.மு.தி.க. கட்சித் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட விஜயகாந்த் போட்டியிட முடியாமல் போனது. இதற்கிடையில் விஜயகாந்தால் சரிவர பேச முடியவில்லை என்ற பிரச்சினையும் எழுந்தது. இதனால் கட்சிப் பணிகளை அவரால் சரிவர கவனிக்க முடியாததால் அவரது மனைவி பிரேமலதா கட்சியை வழி நடத்தி வருகிறார்.

இருப்பினும் விஜயகாந்த் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும், மருத்துவமனைக்கு செல்லும் போது மருத்துவ ஊழியர்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிரப்பட்டு வருகிறது.

இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ள சென்றிருந்தார். இது ஒரு சாதாரண பரிசோதனைதான் என்று அவரது குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து சிகிச்சையின் போது, காலில் ரத்த ஓடம்ட இல்லாதததால் விஜயகாந்தின் காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது விஜயகாந்த் பூரண நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காலில் இருநது 3 விரல்கள் அகற்றப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விஜயகாந்த் விரைவில பூரண நலம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். இருப்பினும் விஜயகாந்த்தின் முழு சிகிச்சை குறித்து குடும்பத்தினர் மற்றும் கட்சி சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை