பகீர்!! கர்ப்பிணி மனைவி துப்பாக்கியால் சுட்டுக் கொலை!! தூங்கிய போது பரிதாபம்!! 

 

உத்தரபிரேதச மாநிலம் ஜெய்சிங்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ்குமார் (35). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு இறந்துவிட்டார். இந்நிலையில் முதல் மனைவி மூலம் இவருக்கு 4 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உறவுப்பெண்ணான ரீட்டா தேவியுடன் ராஜ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதன் மூலம் இவர்களது பழக்கம் காதலாக மாறியது. எனவே 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். படன்பூர் கிராசிங் அருகே ரீட்டாதேவியும், ராஜ்குமாரும் வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் ரீட்டா தேவி கர்ப்பமானார்.


இந்நிலையில் ராஜ்குமார் நேற்று முன்தினம் தனது 2வது மனைவி ரீட்டா தேவியுடன் வீட்டில் எப்போதும் போல உறங்கிக் கொண்டு இருந்தார். திடீரென எழுந்த ராஜ்குமார் 3 மாத கர்ப்பிணியாக இருந்த ரீட்டாதேவியை தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இதில் படுகாயமடைந்த ரீட்டா தேவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார்.

ரீட்டாதேவி கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரின் சகோதரி சீதா தேவி, ராஜ்குமார் கொலை செய்துவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். ராஜ்குமாரின் வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


ரீட்டாதேவியின் சகோதரி அளித்த புகாரின்படி போலீசார் ராஜ்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணி மனைவியை கணவரே துப்பாக்கியால் ஏன் சுட்டுக் கொன்றார் என்று பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதனால் உத்தரபிரதேசத்தில் பதற்றமும், சோகமும் ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை