இன்று பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை!! 

 

தமிழகத்தின் கடந்த சில நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் பெய்த மழையால் இப்போதே பொதுமக்கள் பலவித இன்னல்களுக்கு ஆளானதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

மேலும் சில சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தை பொறுத்தவரை செப்டம்பர் மாதத்தில் பருவமழை தொடங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் நடப்பாண்டில் இப்போதே மழை தொடங்கி விட்ட நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசிக்க உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மழை பாதிப்பு, தடுப்பு முறைகள், உடனடியாக செயல்படுத்த வேண்டியவை, எடுக்கப்பட  வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின்  இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,தலைமைச் செயலாளர் இறையன்பு,மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை