ஒகேனக்கல் ஆற்றில் கல்லூரி மாணவி சடலம்!! அதிர்ச்சி பிண்ணனி!!

 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் பகுதியில் மீனவர் ஒருவர் மணல்திட்டு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது பெண் சடலம் ஒன்று மிதந்து வந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக ஓகேனக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தருமபுரி நெல்லி நகர் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ராஜேந்திரனின் மகள் பிரியங்கா (22) என தெரிய வந்தது. இவர் அரசு கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும் இவர் கடந்த 2 நாட்களாக காணாமல் போனதும் தெரியவந்தது.

இதனையடுத்து, பிரியங்காவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மாணவி காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? வீட்டு பிரச்சினையா? கல்லூரியில் ஏதேனும் தொந்தரவை சந்தித்தாரா ஆகிய கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை