கிண்டல் செய்ததால் கழுத்தறுத்து கொலை!! தேனியில் பரபரப்பு!!

 

தேனி மாவட்டம், கூளையனூர் கிராமத்தில் வசித்து வருபவர் தவசி (50). இவரின் உறவினரான முருகன் என்பவரின் மகள் முபிதா என்பவரை பாலர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் பிரபு (23) என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். நாள்தோறும் வேலை முடித்த பின்பு தனக்கு திருமணம் முடித்து வைத்த தவசியுடன் பிரபு சேர்ந்து மதுகுடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 

பிரபுவிற்கு திருமணமாகி 8 ஆண்டுகள் தனது மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்து நிலையில் தவசி நாள்தோறும் மது அருந்தும் போது ஓடிப்போன பெண்ணைத் தானே உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன் என தொடர்ச்சியாக பலமுறை அவரை கிண்டல், கேலி செய்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரபு கத்தியை மறைத்து வைத்து தவசியுடன் வழக்கம்போல் மது அருந்தச் சென்றுள்ளார். அப்போது மீண்டும் ஓடிப்போன பெண்ணைத் தானே உனக்கு கல்யாணம் செய்து வைத்தேன் என தவசி கிண்டல் செய்யவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபு தவசியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த தவசி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரபாண்டி போலீசார் தவசி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பிரபுவை தேடி வந்த நிலையில், பிரபு தேனி அருகே உள்ள பழனிச்செட்டிபட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.மதுவாலும், கேலி கிண்டல் பேச்சாலும் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை