விரலில் மைக்ரோசிப் மோதிரம்!! சந்திரபாபு நாயுடு அட்ராசிட்டி அலப்பறை!! 

 

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்  சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களாக  தனது ஆள்காட்டி விரலில் மோதிரம் ஒன்றை அணிந்துள்ளார். இதனை தேர்தலில் வெற்றி பெறவும், ஆட்சியில் அமருவதற்காகவும் ஜோதிடர்கள் கூறிய அறிவுரைப்படி அவர் அணிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தான் அணிந்துள்ள மோதிரத்தை பற்றிய ரகசியத்தை மதனபள்ளியில் நடந்த கட்சி மாநாட்டின் போது சந்திரபாபு நாயுடு போட்டு உடைத்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘நான் எனது ஆள்காட்டி விரலில் அணிந் இருப்பது மோதிரம் கிடையாது. எனது உடல்நலத்தை கண்காணிக்கும் ஹெல்த் மானிட்டர்தான். இந்த கருவியில் சாப்பிடும் நேரம், எத்தனை மணி நேரம் நான் தூங்கினேன், ஒரு நாளுக்கு நான் எவ்வளவு தூரம் நடந்துள்ளேன், எனது ஓய்வு நேரம் எவ்வளவு என்பது குறித்த என்னுடைய உடல்நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். மேலும் எனது உடலின் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு உள்ளிட்ட மருத்துவ சம்பந்தப்பட்ட  அனைத்து தகவல்களையும் சேகரித்து என் வீட்டில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி தொடர்ந்து கொண்டே இருக்கும். 

இவற்றை வீட்டில் இருந்தபடியே மானிட்டர் செய்யும் எனது மனைவி புவனேஸ்வரி எனக்கு தேவையான ஆலோசனைகளை அவ்வப்போது போன் செய்து எனக்கு தெரிவித்து கொண்டு இருக்கிறார். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மைக்ரோ சிப் கருவி தான் என் மோதிரத்தில் பொருத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். இதனால் சில நாட்களாக நிலவி வந்த சந்திரபாபு நாயுடுவின் மோதிர சர்ச்சை தற்போது விலகி உள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை