குடும்ப பிரச்சனையால் மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தாயும், மகளும்!! 

 

தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் 58 வயது அன்பழகன். இவர்  பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ராணி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ராணியின் தாய் மீனாட்சி (வயது 65) அவருடன் அவரது வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த ராணியையும் அவரது தாயையும் காணவில்லை என்று அன்பழகன் வீடு முழுவதும் தேடிக் கொண்டிருந்தார். அப்போது மொட்டை மாடியில் ராணி தனது தாயுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பார்த்து அதிர்ச்சி அடைந்து அழுது புலம்பினார்.

இதையடுத்து தாய், மகள் தூக்கில் தொடங்கிய சம்பவம் குறித்து தகவலறிந்த திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன், ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் 2 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்தனர். தாய், மகள் தூக்கில் தொங்கியது குறித்து ராணியின் கணவர் அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் அதிரடியாக விசாரித்து வருகின்றனர்.கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அக்கம் பக்கத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை