கூலித் தொழிலாளியை வெட்டி சாய்த்த மர்மகும்பல்!! சென்னையில் பயங்கரம்!! 

 

சென்னையில்  புளியந்தோப்பில்  5வது தெருவில் வசித்து வருபவர் சுரேஷ் என்ற ஆதி சுரேஷ். இவருக்கு வயது 45. இவர், மவுண்ட் ரோடு பகுதியில் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதி. இவருக்கு புருஷோத்தமன் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் உண்டு. 


ஆதிசுரேஷ் கடந்த 10  வருடங்களுக்கு முன்பு சில குற்றவழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்தார். அவர் நேற்றிரவு புளியந்தோப்பு நெடுஞ்சாலை 1வது தெருவில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேஷை சரமாரியாக வெட்டித் தள்ளியது.

 
சுரேஷ் தலையில் வெட்டப்பட்டதும் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியந்தோப்பு போலீசார், சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை