சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா! ரிஜிஸ்டர் பண்ணி 6 வருஷமாச்சு!

 

வாடகைத் தாய் மூலமாக பிறந்த இரட்டைக் குழந்தைகளைச் சுற்றி பரவி வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நயன்தாரா. விசாரணையில், கடந்த 2016ம் வருடமே விக்னேஷ் சிவனை பதிவு திருமணம் செய்திருப்பதற்கான ஆவணங்களையும், கடந்த வருடம் டிசம்பர் மாதமே வாடகைத் தாய் மூலமாக குழந்தைப் பெற்றுக் கொள்ள முடிவு செய்ததற்கான ஆவணங்களையும் சமர்பித்திருக்கிறார்.

பல வருடங்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. அவர்கள் வாடகைத் தாய் மூலம்  இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டனர்.

இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சட்ட விரோதமாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டாதாக சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து சுகாதாரத்துறை சார்பில் விசாரணை குழு அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. 

அப்போது விசாரணைக் குழுவிடம் நயன் - விக்கி உரிய ஆதாரங்களை சமர்பித்துள்ளனர். அதில்  6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் டிசம்பர் மாதமே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுகொள்ள  பதிவு செய்து விட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் ஜீன் மாதம்தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது எனவும் அந்த சட்டம் தங்களை கட்டுப்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம்