அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கு போட்டு தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!!

 


மதுரை மாவட்டத்தில் பேரையூர் அருகே உள்ள சின்ன பூலாம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 52 வயதான  மணிமுத்து.. இவருக்கு  கையில் எதிர்பாராத விதமாக காயம் ஏற்றபட்டது. இதனால் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


மணிமுத்து விபத்து மற்றும் அவசர சிகிச்சை வளாகத்தில் உள்ள எலும்பு சிகிச்சை பிரிவின் 3-வது தளத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். மணிமுத்துவின் மனைவி மருத்துவமனையில் அவருடன் தங்கியிருந்து தேவையான உதவிகளை செய்து கொண்டிருந்தார்.இந்நிலையில் இன்று காலை மணிமுத்துவுக்கு தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வருவதற்காக அவரிடம் சொல்லிவிட்டு அவரது மனைவி கடைக்கு சென்றுள்ளார். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட மணிமுத்து எலும்பு சிகிச்சை பிரிவின் 3வது தளத்தில் இருந்த கழிவறைக்கு சென்று திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மணிமுத்து ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். சிகிச்சைக்கு வந்த நோயாளி திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரைரில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான பின்னணி என்பது குறித்த மர்மம் விரைவில் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை