கண்ணீர்  கல்யாணம்!! மணமகனை துப்பாக்கி முனையில் கடத்தி மிரட்டி தாலி கட்ட வைத்த அட்டகாசம்!!

 

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் விலங்குக்கு உடல் நிலை சரியில்லை என கூறி கால்நடை மருத்துவர் ஒருவக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை உண்மை என நம்பி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை மருத்துவரை மிரட்டி ஒரு பெண்ணின் கழுத்தில் கட்டயா தாலி கட்ட வைத்து. கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மருத்துவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், “நள்ளிரவு 12 மணிக்கு நோயால் பாதிக்கப்பட்ட விலங்கைப் பரிசோதிக்குமாறு அழைப்பு வந்தது. அதையடுத்து அவர் கிளம்பி சென்றபோது, அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றனர். வீட்டில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சியடைந்து போலீசிடம் புகார் அளிக்கச் சென்றோம்” எனக் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக மணமகனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பெகுசாராய் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் யோகேந்திர குமார் தெரிவித்துள்ளார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு, பீகாரில் பொகாரோ ஸ்டீல் ஆலையில் ஜூனியர் மேனேஜராக இருந்த 29 வயதான வினோத் குமார், பாட்னாவில் உள்ள பண்டாரக் பகுதியில் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கி திருமணம் செய்து வைக்கபட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை