இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்!! மூவர் பலி!! புதுக்கோட்டையில் சோகம்!!

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இரு சக்கர வாகனத்தில் மாதிரிப்பட்டியைச் சேர்ந்த கௌதம், பிரவீன், சூரியபிரகாஷ் ஆகிய 3 இளைஞர்கள் கொடும்பாளூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.எதிர் திசையில் ரங்கசாமி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இவர் விராலிமலை அரசு மதுபான கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் சவுக்காடு பகுதியில் வசித்து வருகிறார். இரவு பணி முடித்து விட்டு ரங்கசாமி மற்றும் வடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய 2 பேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் கொடும்பாளூரில் இருந்து புதுக்கோட்டை சாலையில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.


சத்திரம் என்ற இடத்தில் 2 இருசக்கர வாகனங்களும் எதிர் எதிர்திசையில் பயங்கரமாக மோதிக் கொண்டது. அப்போது கௌதம் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ரெங்கசாமி, கார்த்திக் ஆகிய 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு நேரம் என்பதால் விபத்து குறித்து தாமதமாக அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது.

படுகாயம் அடைந்த பிரவீன் குமார் மற்றும் சூரிய பிரகாஷ் ஆகிய 3 பேரை மீட்ட அக்கம் பக்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த 3 பேரின் உடலையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வைத்தனர்.இருசக்கர வாகனங்கள் எதிரெதிரே பயங்கரமாக மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை