மின்சார ஒயர் அறுந்து விழுந்து பெண் பரிதாப உயிரிழப்பு!! திருவள்ளூரில் சோகம்!!

 

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் வெங்கல் அருகே உள்ள மெய்யூர் கிராமத்தில் வசித்து வந்தவர் வசந்தா (56). இவரின் கணவர் இறந்துவிட்ட காரணத்தால், இவர் மகன் ராமராஜனுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்று அதிகாலை மெய்யூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வீட்டின் வெளியில் கட்டப்பட்டிருந்த மாடு மழையில் நனைந்து கொண்டிருப்பது பார்த்த வசந்தா, அதிர்ச்சியுற்று வெளியே வந்து பசுமாட்டை வசந்தா தனது வீட்டு வராண்டாவில் கட்டுவதற்கு முயற்சி செய்தார். மாட்டின் கயிற்றை அவிழ்த்த வசந்தா வீட்டின் உள்ளே சென்ற போது, யாரும் எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்த மின்சார வயர் ஒன்று பசு மாடு மற்றும் வசந்தா மீது விழுந்தது. 

இதில் கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி வசந்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வசந்தா அருகில் இருந்த பசு மாடும் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக பசுமாடும் உயிரிழந்தது. நீண்ட நேரமாக வசந்தாவை காணாத அவரது மகன் ராமராஜன் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது, மின்சாரம் தாக்கி தாயும், மாடும் இறந்து கிடப்பதை பார்த்து போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து அழுது கூச்சலிட்டார். இதனால் அப்பகுதியில் பதற்றமும், சோகமும் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஆகியோர் வசந்தாவின் வீட்டிற்கு விரைந்து சென்று ராமராஜனுக்கு ஆறுதல் கூறினர். மேலும் இது குறித்து பெரியபாளையம் போலீசுக்கும் தகவல் அளித்தனர். வசந்தாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மழை நேரத்தில் அடிக்கும் பலத்த காற்று காரணமாக ஆங்காங்கே மின்சார ஒயர்கள் அறுந்து கீழே விழுந்துவிடுகிறது. எனவே அவை மழை நீரில் பாய்ந்தும், மக்கள் மீது அறுந்து விழுந்தும் உயிர் பலியை ஏற்படுத்தி விடுகிறது. எனவே எதிர் வரும் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மின்வாரியம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை