போதையில் தண்டவாளத்தில் தூங்கிய  இளைஞர்கள்!!  சரக்கு ரயில் ஏறி  உடல் நசுங்கி 2 பேர் பலி!!

 

தூத்துக்குடியில் மது அருந்திவிட்டு ரயில்வே தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு பேர்  மீது சரக்கு ரயில் மோதி உடல் நசுங்கி  உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி பசும்பொன் நகரைச் சேர்ந்த  மாரிமுத்து மற்றும் திரு.வி.க நகரைச் சேர்ந்த மாரிமுத்து, நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த ஜெபசிங் ஆகியோர், தூத்துக்குடி பிஎன்டி காலனியில் நடைபெற்ற நண்பர் திருமணத்திற்கு சென்றுவிட்டு அதிக மதுபோதையில் திரும்பிய இவர்கள் மூன்றாவது மைல் ரயில்வே தண்டவாளத்தில் உறங்கியுள்ளனர்.

 அப்போது அதிகாலை 3 மணி அளவில் சரக்கு ரயில் வந்துள்ளது. இதில் ரயில்வே தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ரயில்  ஏறிச் சென்றதில் ஜெபசிங் காயத்துடன் உயிர் தப்பிய நிலையில் மற்ற இருவர் உடல் நசுக்கி உயிரிழந்தனர். பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அனுப்பிவைத்தனர்.  

மேலும் காயமடைந்த ஜெபசிங்கிடம் விசாரணை மேற்கொண்டதில் மது போதையில் இருவர் ரயில் தண்டவாளத்தின் மீதும், இவர் தண்டவாளத்தின் நடுவாக உறங்கியது தெரியவந்தது. இது  குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகபடியான மது போதையில் ரயில்வே தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு பேர்  மீது சரக்கு ரயில் மோதி உடல் நசுங்கி  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை