அண்ணாமலை குடும்பத்துடன் இலங்கை பயணம்... அக்.1ல் சென்னை திரும்புகிறார்!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது குடும்பத்தினருடன் இலங்கை புறப்பட்டுச் சென்றார். ஒரு வார காலம் இலங்கையில் தங்கி இருக்கும் அண்ணாமலை வருகிற 1ம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் தமிழர்கள் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், தசரா விழாவிலும் அவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நேற்று இலங்கை புறப்பட்டு செல்லும் முன்பு சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பில், “ஒவ்வொரு முறை நான் வரும் போதும் பேட்டி கேட்கிறீர்கள். நான் கொடுத்துக் கொண்டே இருக்க முடியுமா? உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு சென்றார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!