நேபாளத்தில் பனிச்சரிவு ... 9 பேர் பலி!
நேபாளத்தில் இரு வேறு இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவு விபத்துகளில், இரு நேபாள வழிகாட்டிகள் உட்பட 9 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர்.முதல் சம்பவம் கௌரிசங்கர் ஊரக நிர்வாகத்தின் கீழ் உள்ள யாலுங்ரீ மலையில் (உயரம் 6,920 மீட்டர்) திங்கள்கிழமை காலை 10 மணியளவில் ஏற்பட்டது. அப்போது அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 7 பேர் பனிச்சரிவில் புதையுண்டனர்.
அவர்களில் இரு நேபாள வழிகாட்டிகள், இரு இத்தாலியர்கள், ஒரு கனடா வீரர், ஒரு பிரான்ஸ் வீரர், ஒரு ருமேனியர் ஆகியோர் அடங்குவர். இவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், மூன்று நேபாளர்கள் மற்றும் ஐந்து வெளிநாட்டினர் காயமடைந்து காத்மண்டு மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரில் அனுப்பப்பட்டனர்.
மற்றொரு சம்பவத்தில், கடந்த அக்டோபர் 28 முதல் காணாமல் போயிருந்த இரு இத்தாலிய மலையேற்ற வீரர்கள் மனாஸ்லு பகுதியில் உள்ள பன்பரி மலையில் (உயரம் 6,887 மீட்டர்) சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் உடல்கள் செவ்வாய்கிழமை 5,242 மீட்டர் உயரத்தில் இருந்து மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுடன் சிக்கியிருந்த இன்னொரு இத்தாலிய வீரர் உயிருடன் மீட்கப்பட்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!