இன்று ஆடி திருவாதிரை... கங்கைகொண்டசோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் கொண்டாட்டம்!
ஆடி திருவாதிரை தினமான இன்று ராஜேந்திர சோழ மன்னனின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா ஆடித் திருவாதிரை விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ-க்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்தார்.
விழாவில் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்த ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பது பெருமைக்குரியது. திருவள்ளுவருக்கு சிலை, பூப்புகாரில் கோட்டம் போன்றது நம் மண்ணின் பெருமை. 1000 ஆண்டுகளுக்கு முன்பே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து போர் புரிந்தவர் ராஜேந்திர சோழன். அனைத்துக் கிராமங்களிலும் ஏரிகள் அமைக்க வழி வகுத்தவர் ராஜேந்திர சோழன். இந்தியாவிலேயே அதிக நிலபரப்பை ஆண்ட பெருமை ராஜேந்திர சோழனுக்கு உண்டு. அப்படி பெருமை வாய்ந்த மன்னருக்கு இத்தகைய விழாவைக் கொண்டாட முதல்வர் உத்தரவிட்டது பெருமைக்குரியது. இதனால் இப்பகுதி வரும் காலங்களில் பெரும் வளர்ச்சி அடையும்” என்றார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா