undefined

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 3 பேர் பலி, 30 பேர் படுகாயம்.. 2  லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

 

மத்தியபிரதேச மாநிலத்தில் மலைப்பாங்கான சாலையில் பஸ் கவிழ்ந்து நிகழ்ந்த பெரும் விபத்தில் 3 பேர் உயிரிழந்தும், 30 பேர் காயமடைந்தும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தூரில் இருந்து மெஹவ் நோக்கி சென்ற பஸ் நேற்று இரவு சிம்ரோல் நகரை அண்மித்த பெருஹட் பகுதியில் வந்தபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது. அதனால் பஸ் சாலையை விட்டு சறுக்கி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார், மீட்பு பணியாளர்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மூன்று பேரின் நிலைமை மிக கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில முதல்-மந்திரி மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?