undefined

துபாயில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானம்... கடலுக்குள் சரிந்து பரபரப்பு.. 2 பேர் பலி!

 

ஹாங்காங் : துபாயில் இருந்து புறப்பட்ட போயிங் 747 சரக்கு விமானம், ஹாங்காங் சர்வதேச விமான நிலைய ரன்வேயில் தரையிறங்கிய சில நொடிகளில் திடீரென பாதை விட்டு விலகி அருகிலுள்ள கடலுக்குள் பாய்ந்தது.

துபாயிலிருந்து வந்த இந்த கார்கோ விமானம், ஹாங்காங் விமான நிலையத்தின் ரன்வேயில் பக்கவாட்டில் சரிந்து கடலி்நீரில் பாதியாக மூழ்கியதாக விமானத்துறை தெரிவித்துள்ளது. இதில் விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

ஆனால், ரன்வே அருகே பணிபுரிந்திருந்த விமான நிலைய பணியாளர்கள் இருவர் விமானம் சரிந்தபோது சிக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளதாக ஹாங்காங் விமானத்துறை அறிவித்துள்ளது. அதிகப்படியான விமான போக்குவரத்து நடைபெறும் வடக்கு ரன்வே தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், தெற்கு மற்றும் மத்திய ரன்வேகளை இயக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?