”சந்திராயன் 3” தோனி வைரல் வீடியோ!!
ஆகஸ்ட் 23ம் தேதி இந்தியா வரலாற்று சாதனை படைத்த தினம். சந்திரயான்-3 ஐ வெற்றிகரமாக தரையிறக்கியது மூலம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. சந்திரயான்3 லேண்டர் நிலவின் மேற்பரப்பை தொடுவதை உலகமே காணும் வகையில், லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. நிலவைத் தொட்ட அந்த தருணம் இந்தியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அத்துடன் பலரும் இஸ்ரோவிற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதே போல் கிரிக்கெட் வீரர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ரஷ்யாவின் தென் துருவத்தை நோக்கிச் சென்ற லூனா 25 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் விழுந்தது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பாக தரையிறங்கி உள்ள, 'விக்ரம்' லேண்டர் தனது பணியைச் சிறப்பாக செய்து வரும் நிலையில், அதற்குள் இருக்கும் 'பிரக்யான்' எனப்படும் ரோவர் தரையில் இறங்கி நிலவின் மேற்பரப்பில் சோதனைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. அதன் மூலம் கிடைக்கும் அனைத்து தகவல்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் உலகத்திற்கு புதியவையாக இருக்கும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!