முதல்வர் மனைவி திருப்பதியில்  மொட்டையடித்து வேண்டுதல்..!!

 

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் . இவரது மனைவி ஷோபா சந்திரசேகரராவ். இவர்கள் தம்பதி சமேதராக  று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.   இந்த நிலையில்  சந்திரசேகரராவ் மனைவி  நேற்று காலையில் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினார்.

பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த தோமாலை, அர்ச்சனை சேவையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.  அர்ச்சகர்கள், அவருக்கு கோயில் பிரசாதங்கள் வழங்கி ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.


இதனையடுத்து  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் முதல்வர் கேசிஆர் நலமுடன் இருக்கவும், தேர்தலில் பிஆர்எஸ் கட்சி வெற்றிபெற வேண்டியும் முதல்வரின் மனைவி ஷோபா சுவாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!