undefined

கட்டபொம்மன் வேடத்தில் சென்ற கல்லூரி மாணவி: கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு!

 

நேற்று தமிழகம் முழுவதுமாக அனைத்து கிராமங்களிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் திடீரென கல்லூரி மாணவி ஒருவர் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் சென்று மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளை யூரணி ஊராட்சியில் நேற்று ஜோதிபாசு நகர் எனும் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டார்கள் கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார் .

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி ஏபிசி கல்லூரியில் மூன்றாவது ஆண்டு வேதியல் பிரிவில் கல்வி பயின்று வரும்மாணவி சந்தியா தங்கள் பகுதியைச் சேர்ந்த மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த மக்களில் 50,000 குடும்பங்களுக்கு குடியிருப்பு மனைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இதனை பல்வேறு கூட்டங்களில் அரசியல் கட்சிகளிடமும் சமூக அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் புகார் அளித்தும் இதுவரை எங்களின் புகார் மக்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேற்படி ஊராட்சியானது தூத்துக்குடியில் இருந்து 16 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதியில் பட்டா வழங்கக் கூடாது என்ற தடையானை அரசால்ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டா வழங்க மார்க்கமில்லை என்ற நிலை இருந்து வந்தது. 

இதனை கருத்தில் கொண்ட மாணவி சந்தியா, சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடமணிந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் தடையானையை நீக்கி பட்டா வழங்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர் சரவணகுமார் அவர்களை சந்தித்து மனு அளித்தார். இதனால் கிராம சபைக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!